Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளி திறப்பு மற்றும் பொதுத் தேர்வு தேதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

 பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.


பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதற்கான அட்டவணை முதல்வர் உத்தரவின் பேரில் பின்னர் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு குறித்து ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். “சட்டமன்றத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அந்த அட்டவணை வெளியான பின்னர் அதைப் பொறுத்தே பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏனெனில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பள்ளிகளில்தான் நடைபெறும். அதனால் பொதுத் தேர்வு தேதி அதன் பின்னர் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

பள்ளி திறப்பு மற்றும் பொதுத் தேர்வு தேதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! பள்ளி திறப்பு மற்றும் பொதுத் தேர்வு தேதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! Reviewed by Rajarajan on 3.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை