Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..?





தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் தற்போது வரை முழுவதுமாக திறக்கப்படவில்லை. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகமாக மாணவர்களை தாக்கியதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன.


கொரோனா அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!




12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு மற்றும் அவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நேரடி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் மனஅழுத்ததில் உள்ளனர்.


மேலும் அவர்கள் பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும் அல்லது ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படலாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர். சிலர் தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வுகளை நடத்தாமல் ஜூன் மாதத்தில் தேர்வுகளை நடத்தலாம், அதுவரை தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை நேற்று அரசு தேர்வு இயக்ககத்துடன் ஆலோசனை நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..? Reviewed by Rajarajan on 9.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை