Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்



 திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாததையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாளையும், நாளை மறுநாளும் (ஏப்.16, 17) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

''திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி இட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பூசி இட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறியும், பெரும்பாலான பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவருகிறது.

எனவே, கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கல்வி மாவட்ட அளவில் இன்றும் (ஏப்.16), நாளையும் (ஏப்.17) சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் Reviewed by Rajarajan on 15.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை