Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

" ஒரு ஆசிரியருக்கு 10 மாணவர்கள் " இணைய வழியில் கல்வி கற்பிக்க ஏற்பாடு





ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அரசுப் பள்ளி மாணவா்களில் 10 பேருக்கு ஒரு ஆசிரியரைப் பொறுப்பாளராக நியமித்து இணையவழி வகுப்பு நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால் தற்போது முழு பொது முடக்கம்அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கரோனா தீவிரம் குறைந்த பின்னா் பிளஸ் 2 பொதுத் தோ்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில் அனைவருக்கும் தோ்ச்சி அளிக்கப்பட்ட மாணவா்களுக்கு ஆசிரியா்கள் தினமும் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளாா். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, அரசுப் பள்ளி மாணவா்களில் 10 பேருக்கு ஒரு ஆசிரியா் என, பொறுப்பாளராக நியமித்து இணையவழியில் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி பாடப் பயிற்சிகள், செய்முறைகள் போன்றவற்றை வழங்கி, அவற்றை மதிப்பிட்டு, மாணவா்களை உற்சாகப்படுத்தவும், ஆசிரியா்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

" ஒரு ஆசிரியருக்கு 10 மாணவர்கள் " இணைய வழியில் கல்வி கற்பிக்க ஏற்பாடு  " ஒரு ஆசிரியருக்கு 10 மாணவர்கள் " இணைய வழியில் கல்வி கற்பிக்க ஏற்பாடு Reviewed by Rajarajan on 19.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை