Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு – ஜூன் முதல் விநியோகம்!





தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை விநியோகம் செய்ய முதல்வர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.


முழு ஊரடங்கால் பொதுமக்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.பொது மக்களின்‌ சிரமத்தை குறைக்கும்‌ வகையில்‌, 13 மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌, வரும்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வழங்கிட, கூட்டுறவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ள நிலையில், ரேஷன் கடைகள் தினசரி காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

13 மளிகைப் பொருட்கள்:

  • கோதுமை மாவு -1 கிலோ
  • உப்பு – 1 கிலோ
  • சர்க்கரை – 500 கிராம்
  • ரவை – 1 கிலோ
  • உளுந்த பருப்பு – 500 கிராம்
  • புளி – 250 கிராம்
  • கடலை பருப்பு – 250 கிராம்
  • டீ தூள் – 250 கிராம்
  • சீரகம் – 100 கிராம்
  • மஞ்சள் தூள் – 100 கிராம்
  • மிளகாய் தூள் – 100 கிராம்
  • குளியல் சோப் – 1
  • துணி சோப் – 1
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு – ஜூன் முதல் விநியோகம்! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு – ஜூன் முதல் விநியோகம்! Reviewed by Rajarajan on 28.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை