Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை

 

திருச்சி சமயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் சுமார் 2,500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் விடுதியில் தங்கிப் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் மற்றும் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் 3 பேர் என மொத்தம் எட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






இதையடுத்து மாணவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மேலும், வரும் 22-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் விடுதிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை Reviewed by Rajarajan on 21.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை