Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிக்கு வரும் 19 தேதி முதல் திருப்புதல் தேர்வு கட்டாயம் நடைபெறுமா...? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், ஊரடங்கு காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் பற்றிய அறிவிப்பு, தேர்வு நடைபெறும் ஒரு வாரம் முன்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வரும் 19ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு.

பள்ளிக்கு வரும் 19 தேதி முதல் திருப்புதல் தேர்வு கட்டாயம் நடைபெறுமா...? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கு வரும் 19 தேதி முதல் திருப்புதல் தேர்வு கட்டாயம் நடைபெறுமா...? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 11.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை