Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அடிப்படை சம்பள உயர்கிறது..? ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!

 


மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000த்தில் இருந்து ரூ.26,000 ஆக உயர்த்த கோரிக்கை வைத்து வந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பான முடிவெடுக்க உள்ளது.


மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை மத்திய அரசு உயர்த்தி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க உள்ளது. இந்த அறிவிப்பு சம்பள உயர்வுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.  


இதனால் மத்திய அரசு இதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை ஜனவரி 26ம் தேதி அதாவது குடியரசு தினத்திற்கு முன் முடிவு செய்யலாம். இதனை 3.68 சதவீதமாக உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 அளவிற்கு உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தின் படி ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆகிவிடும். தற்போது, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், மற்ற படிகள் தவிர்த்து 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அடிப்படை சம்பள உயர்கிறது..? ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அடிப்படை சம்பள உயர்கிறது..?  ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு! Reviewed by Rajarajan on 8.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை