Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிப்பு – அரசு தேர்வுத்துறை



தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. மற்ற அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. தேர்வு முறையினால் மாணவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், அரசு மாணவர்களின் நலன் கருதி இறுதி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் பள்ளிக்கு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அரசு தேர்வுகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதன் படி, பொதுத்தேர்வு தொடர்பான பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிக்குள் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு அதிக தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.



12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிப்பு – அரசு தேர்வுத்துறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிப்பு – அரசு தேர்வுத்துறை Reviewed by Rajarajan on 26.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை