Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தற்காலிகமாக ரத்து - கல்வித்துறை ஆலோசனை





12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.


மே 3ம் தேதி 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே தேர்வு நடைபெற உள்ளதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அரசு தற்போது வரை அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி  மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தற்காலிகமாக ரத்து - கல்வித்துறை ஆலோசனை 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தற்காலிகமாக ரத்து - கல்வித்துறை ஆலோசனை Reviewed by Rajarajan on 31.3.21 Rating: 5

1 கருத்து