Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் மீண்டும் புதிய உச்சத்தை அடைந்தது கொரோனா தொற்று பரவல்




தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்கள், தேர்தல் பிரச்சார கூட்டங்கள் போன்றவற்றில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இருப்பினும் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,971 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் மீண்டும் புதிய உச்சத்தை அடைந்தது கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் மீண்டும் புதிய உச்சத்தை அடைந்தது கொரோனா தொற்று பரவல் Reviewed by Rajarajan on 26.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை