Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் அதிகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு அனைத்து பள்ளிகளும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்பிற்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தபட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் அதிகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் அதிகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! Reviewed by Rajarajan on 24.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை