Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை



தாம்பரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் ஒருவருக்கு அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 2 ஆசிரியர்களுக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதனை தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் இருக்க பள்ளி மூடப்பட்டது. மார்ச் 22ம்  வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அப்பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்பள்ளியில் பயிலும் 80 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை Reviewed by Rajarajan on 20.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை