Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கல்வி, வேலைவாய்ப்புகளில் 50% மேல் இடஒதுக்கீடு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்



கல்வி, வேலைவாய்ப்புகளில் 50% மேல் இடஒதுக்கீடு குறித்து மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் 52% இடஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய பாஜக அரசு மசோதா கொண்டுவந்தது. இந்த அறிவிப்பு உச்சநீதிமன்ற 50% இடஒதுக்கீடு முறைக்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.

ஏற்கனவே தமிழகத்தில் வழங்கப்பட்ட 69% சதவிகித இடஒதுக்கீடு குறித்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறியது. மேலும் அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகள் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கை வழங்க தமிழக அரசு வழங்கும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு இந்த வழக்கில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





கல்வி, வேலைவாய்ப்புகளில் 50% மேல் இடஒதுக்கீடு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் கல்வி, வேலைவாய்ப்புகளில் 50% மேல் இடஒதுக்கீடு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  Reviewed by Rajarajan on 9.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை