Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரர்களுக்கு உத்தரவு - கல்வித் துறை


தமிழக பள்ளி கல்வித் துறை, அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, நோட்டு, புத்தகங்கள் உட்பட 14 வகையான நலத்திட்டங்களை மாணவர்களை ஊக்குவிக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தலைமையாசிரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 



இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வீடு வீடாக சென்று அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் எந்தெந்த துறையில் எந்த மாதிரியான பதவிகளில் உள்ளனர் என்பது குறித்த விழிப்புணர்வு போர்டு, பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்படும். தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ள பள்ளிகளில் எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் உள்ளது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்என்றார்.
அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரர்களுக்கு உத்தரவு - கல்வித் துறை அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரர்களுக்கு உத்தரவு -  கல்வித் துறை Reviewed by Rajarajan on 11.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை