Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவு

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்து உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.ஆனால் சில மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் மிகக் குறைவாக காணப்படுவதால்,
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. 
இதுகுறித்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விடுத்துள்ள உத்தரவில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

 
இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி இறுதி ஆண்டு நிறைவு செய்து வெளியேறக்கூடிய மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக துண்டு பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. மேலும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்க கூடிய நலத்திட்ட உதவிகளை மாணவர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவு Reviewed by Rajarajan on 27.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை