Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் பொது கலந்தாய்வு மாறுதல் எப்பொழுது அறிவிப்பு வெளியாகும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கவலை..?


தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணி மாறுதல் வழங்கி வருகிறது



ஆனால் இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை இன்னும் சில தினங்களில் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலின் காரணமாக கலந்தாய்வுக்கான அறிவிப்பு மற்றும் ஆணை ஏதும் வெளியிடப்படவில்லை. 



தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் ஆன நிலையில்  நேற்றைய தினம் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்தது. தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்த காரணத்தினால் அரசு இனி புதிய அறிவிப்புகள் நல திட்டங்கள் போன்றவை அறிவிக்க இயலும். எனவே அரசு மிக விரைந்து இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.

ஆசிரியர் பொது கலந்தாய்வு மாறுதல் எப்பொழுது அறிவிப்பு வெளியாகும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கவலை..? ஆசிரியர் பொது கலந்தாய்வு மாறுதல் எப்பொழுது அறிவிப்பு வெளியாகும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கவலை..? Reviewed by Rajarajan on 28.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை